Friday, April 16, 2010
ஒரு கோப்பை கசப்பு...
ஒரு வைரம் ஜொலிக்க நன்றாக பட்டை தீட்டப்பட வேண் டும். அதேபோல் ஒருத்தன் அவனோட தளத்துல இருந்து ஜொலிக்க நான்குபேரிடம் திட்டு படவேண்டும்.என்னடா இது தீட்டப்படவேணுங்குறா...திட்டுப்பட வேணுங்குறா... அப்படின்னு நாலுபேரு திட்டுறதும் எனக்கு விளங்குது. ஒருவன் ஜொலிக்க நாலு பேரு திட்டனுமுனு சொல்ற நானேதிட்ரவங்களப் பாத்து திட்டினா எப்படி...என்னடா இப்படி குழப்புறானேன்னு திட்டாதீங்க...இனி உங்களப் பார்த்து திட்ரவங்களப் பார்த்து நீங்க திட்டாதீங்க. இந்தத்திட்டுக்களை வைத்து உங்களை நீங்களே தீட்டிக்கொள்ளுங்கள்.மறுபடியும் குழப்புறானே...மித்திரனுக்காக எதாவது எழுதி தாரேன்னு ஆசிரியருக்கு வாக்குறுதிகொடுத்துட்டேன்.ஆனா என்ன எழுதுறதுன்னுதான் தோனல்ல...சரி யோசிப்போமுன்னு யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போ என் பக்கத்துல வந்த நண்பன் கேட்டான்...என்னடா யோசிச்சுக்கிட்டு இருக்க...ஏதாவது எழுதலான்னு யோசிச்சுகிட்டு இருக்கேண்டா என்றேன்.உடனே ...நீ எல்லாம் எழுதின்னு இழுத்தான். எனக்கு அது திட்ரமாதிரியேஇருந்துச்சு.அதான் திட்ரதவச்சே எழுதலா முன்னு...காய்க்கிற மரம்தான் கல்லடி படுமுன்னு வழக்கமா சொல்லுவாங்க.ஏன்னா ஒருத்தன் வளர்ந்துகொண்டு போறப்பத்தான் அவன பத்தின விமர்சனங்கள் எழும். அது அவனுக்கு சில நேரங்களில் உறுதுனையாஇருக்கும். அதே நேரம் உறுத்துகிற ஆணியாகவும் இருக்கும்.உறுத்துகிற ஆணின்னு நான் சொல்றது அவனைப் புகழ்ந்து எழும்விமர்சனங்களை. என்னடா ஒருத்தன் புகழ்ந்து பேசுறது எப்படி உறுத்துன்ற கேள்வி எழுவது எனக்கு புறியுது.ஒருவன் வெற்றியின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறான். அவனைஇடை நிறுத்தி ஒரு செங்கம்பளத்தை இரண்டு படிகளில் மட்டும் விரித்துவிட்டு இப்போது ஏறிச் செல் என்றால் அவன் ஏறுவானா?நிச்சயம் மாட்டான்.அந்த செங்கம்பலத்திலேயே நின்று விடுவான். அவன் ஏற வேண்டிய படிகளை மறந்து விடுவான்.அதைதான் மேலே ஆணின்னு குறிப்பிட்டேன்.ஒருவனிடம் குறை இருந்தால் அவன் எதிரே பேசு. அவனைபுகழ்வதென்றால் அவனுக்கு பின்னே சென்று புகழ் என்று கூறுவார்கள்.இதைத்தான் இப்படி கூறியிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.என்னுடைய தொழிலில் எனக்கு நிறை எதிரிகள் இருக்கிறார்கள் என்றுஅலட்டிக் கொள்றவங்கள நாம பாத்திருப்போம்.அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...உங்களுடன் துரோகிகள் தான் இருக்கூடாது எதிரிகள் தாராளமாக இருக்கலாம். அவர்கள்தான் உங்களை வழி நடத்துவார்கள்.தான் செய்யும் பிழைகளை தன்னை விட தன் நண்பர்களை விட உங்களுடைய எதிரிகள் நன்கு கவனித்துககொண்டிருப்பார்கள்.நான் சொல்வது சரிதானே..ஒரு நிமிடம் மித்திரன மூடி வச்சிட்டு யோசிச்சு பாருங்க...என்னங்க நான் சொன்னது சரியா இருக்கா?ஒரு வேலைய தொடங்கிட்டு, அதுல ஒரு தோல்வின்னா அத ஓரமா ஒதுக்கிட்டுவேற வேலைய பார்க்க போ÷றாம். அந்த ஒரு தோல்வியிலதாங்க இருக்கு நம்மவெற்றியே...தோல்விங்குறது வெற்றிக்கான ஏணிப்படின்னு எல்லாறும்தான் சொல்றாங்க...இவனும் சொல்ல வந்துட்டாங்குறீங்களா?தவறு செய்துட்டோமே தோல்வி அடைஞ்சிட்டோமே என்று நினைக்கவேகூடாது. தவறு செய்றது மனிதனின் சுபாவம். ஆனால் செய்த தவறையே மீண்டும் செய்தால்...அய்யோ அது பாவம்.தோல்விங்குறது இயல்பு. ஆனா புத்திசாலித் தனமான தோல்வி வெற்றிக்குவழி வகுக்குங்கிறத புரிஞ்சிக்கிட்டா தோல்வியப்பார்த்து பயப்படவேண்டியதில்ல.விழுந்திட்டியா... பரவாயில்லை. திருப்பி எழு... நூறாவது படியில இருந்துவிழுந்தா எழுந்து இருநூறாவது படி வரைக்கும் இந்த முற ஏறு.அதுதான் வெற்றிபுகழோங்கிய பெருமைங்குறது விழாம இருப்பதில இல்லை. விழுந்த ஒவ்வொரு சமயத்திலும் மீண்டும் எழுந்து அந்த இலக்க நோக்கி ஓடுரதுலத்தான்இருக்கு.சரி இன்னும் சில இலவசமான கசப்புகளோடு சந்திப்போம்.என்னது இலவசமான கசப்புன்னுதானே யோசிக்கிறீங்க. அதாங்க அட்வைஸ்.இந்த அட்வைஸ் கசக்குங்குறது எனக்கும் தெரியுமுங்க
0 comments:
Post a Comment