Friday, April 16, 2010

துன்ப லோகம்...

நிலா புறப்பட்டு விட்டது. காதலர்கள் வீட்டு மாடியில் நிலா முற்றத்தில் அமர்ந்து களகளப்பாக கதை பேசுகிறார்கள். அவர்களுடைய இன்பத்தை இரட்டிப்பாக்கிறது நிலா. ஆனால் காதலியை அடையப் பெறாமல் தவிக்கும் இவனுக்கு நிலா நெறுப்பை கொட்டுகிறது. உலகத்துக்கெல்லாம் ஒரு நிலா. எனக்கு ஒரு நிலாவா? (எனக்கு மட்டும் சுடு நிலா என்று வைரமுத்து சொன்னது போல...) வாடைக் காற்று வீசத் தொடங்குகிறது. மற்ற வீடுகளில் காதலர்கள் குளிர்காற்றின் கொடுமையை அன்பணைப்பில் போக்கிக் களிக்கிறார்கள். ஆனால் தனிமையில் தத்தளிக்கும் இவன் என்ன செய்வான்... படுக்கைக்கு போய்ப் படுத்தாள். உறக்கம் எங்கே வரும், இந்த படுக்கையில் பிறர் படுத்தால் சுகமாக நித்திரை வரும்? நித்திரை வராவிட்டாலும் படுத்திருக்கும் நேரம் இன்பமாக இருக்கும். ஆனால் இவன் விஷயத்தில் அப்படியல்ல... உலகத்துக்கெல்லாம் ஒரு படுக்கையாகவும் இவனுக்கு மட்டும் ஒரு படுக்கையாகவும் இருக்கிறது...
மொத்தமாக பார்த்தால் மற்றவர்களுடைய உலகம் வேறு... இவனுடைய உலகம் வேறாக இருக்கிறது. மற்றவர்களுடைய உலகம் இன்பலோகம்... இவனுடையதோ துன்ப லோகம்... இவன் பிறந்ததால் உலகமே இரண்டாகிவிட்டது....

0 comments:

Post a Comment